மலைநாட்டு திவ்யதேசம் என்றாலும், திருவட்டாறு இருப்பது தமிழ்நாட்டில் (திருவண்பரிசாரம் என்ற மலைநாட்டு திவ்யதேசமும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.) ஆயினும் இது மற்ற கேரளா திவ்யதேசங்களைப் போலவே பூஜை முறைகள் கொண்டது.
பிரும்மாவின் தவத்தைக் கலைக்க, அவருடன் ஊடல் கொண்ட சரஸ்வதி தேவி கேசன், கேசி என்ற இரு அரக்கர்களை அனுப்பினார். பிரும்மா பெருமாளிடம் பிரார்த்திக்க, பெருமாள் கேசனை பூமிக்கு அடியே அழுத்தி அந்த இடத்திலேயே பள்ளி கொண்டு விட்டார். தன் சகோதரன் கேசனை விடுவிக்க, கேசி என்ற அரக்கி பரணி, கோதா என்ற இரு ஆறுகளாகப் பெருக்கெடுத்து வந்தாள். அப்போது பூமாதேவி பெருமாள் படுத்திருந்த இடத்தை மேடாக இருக்கும்படி உயர்த்தி விட்டார்.
கேசி பெருமாளிடம் சரணடைய, பெருமாள் அவளை மன்னித்து, தன் கோவிலைச் சுற்றி இரு நதிகளும் மாலைபோல் ஓட வகை செய்தார். கோவிலைச் சுற்றி வட்டம் போல் இரு நதிகள் ஓடுவதால் இந்த இடம் திருவட்டாறு என்று பெயர் பெற்றது. காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு நதிகளுக்கிடையே ஸ்ரீரங்கம் அமைந்திருப்பதை போல் இந்தத் தலமும் அமைந்துள்ளது.
ஹாதலேகர் என்ற முனிவருக்குப் பெருமாள் அஷ்டாட்சர மந்திரத்தை அருளிய பெருமையும் இந்தத் தலத்துக்கு உண்டு.
திருவனந்தபுரம் கோவிலைப் போல் இந்தக் கோவிலும் மார்த்தாண்டவர்மனால் திருப்பணி செய்யப்பட்டது.
அனந்தபத்மநாபர் போலவே தோற்றம் கொண்ட ஆதிகேசவப் பெருமாள் சில விஷயங்களில் மாறுபடுகிறார்.
இவர் 22 அடி நீளம் கொண்டவர். மேற்கு நோக்கி சயனித்திருப்பதால் திருமுடி நமக்கு வலப்பக்கமாக இருக்கிறது. அதாவது அனந்தபத்மநாபர் விக்கிரகத்தின் கண்ணாடி பிம்பம் போல் திருமுடியும், திருவடியும் மாறி இருக்கின்றன. (காஞ்சிபுரத்தில் உள்ள திருவெஃகா, திருவட்டாறு ஆகிய இரு தலங்களில்தான் பெருமாள் நமக்கு வலப்புறமாகத் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார்.) மேலும் நாபிக்கமலத்தில் பிரும்மா இல்லை. இவர் ஆதிகேசவப் பெருமாள் என்பதால் பிரும்மா தோன்றுவதற்கு முன் இருந்த தோற்றத்துடன் இங்கே காட்சி அ ளிக்கிறார்.
இவர் 16008 சாளக்கிராமங்களால் உருவாக்கப்பட்டவர்..
மூலவர் - ஆதிகேசவப் பெருமாள். புஜங்க சயனம். மேற்கு நோக்கிய திருமுக மண்டலம்.
தாயார் - மரகதசவல்லித் தாயார். தனிக்கோவில் சந்நிதி இல்லை.
பரசுராமருக்கும், சந்திரனுக்கும் காட்சி கொடுத்த பெருமாள் இவர்.
மூலவர் சந்நிதிக்கு முன் ஒற்றைப்பாறை என்ற ஒரு பெரிய மேடை போன்ற கல் இருக்கிறது. அதன்மீது ஏறி நின்று பார்த்தால்தான் பெருமாளை நன்கு தரிசிக்க முடியும். சில சமயங்களில்தான் இதை அனுமதிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. நாங்கள் தரிசனம் செய்தபோது கோவில் சம்ப்ரோக்ஷணத்துக்கான பணிகள் நடந்து கொண்டிருந்தன. அதனால் இப்போது உத்சவர் சேவை மட்டும்தான். ஆயினும், மூலவரை இந்தப் பாறைக்குப் பின் கீழே நின்று தரிசிக்க முடிந்தது.
திருவனந்தபுரம் போல் இங்கும் மூன்று வாயில்கள் மூலம் பெருமாளை தரிசிக்க வேண்டும்.
திருவனந்தபுரம் போல் இங்கும் ஒரு கிருஷ்ணர் சந்நிதி உள்ளது. அதேபோல் தூண்கள் நிறைந்த அகலமான பிரகாரம்.
திருப்பணிகள் முடிந்து ஸம்ப்ரோக்ஷணம் ஆனபிறகு மீண்டும் பெருமாளைத் தரிசிக்கப் பெருமாள் அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.
இந்த யாத்திரையில் திருவண்பரிசாரம் என்ற மலைநாட்டு திவ்யதேசம் இடம் பெறவில்லை. இதுவும் தமிழ்நாட்டில்தான் உள்ளது - திருவட்டாறிலிருந்து சிறிது தூரம்தான். இந்த திவ்யதேசத்தை தரிசிக்கவும் இன்னொரு முறை வர வேண்டும்.அப்போதுதான் கேரளா திவ்யதேசங்கள் 13ம் பூர்த்தியாகும்.
இந்த திவ்ய தேசம் பற்றிய தஞ்சாவூர் ரமேஷ் அவர்களின் விளக்கத்தை வீடியோக்களில் கேட்டு மகிழுங்கள்.
இந்த திவ்யதேசம் பற்றி நம்மாழ்வார் பாடியுள்ள 11 பாசுரங்கள் இதோ.
கேரளாவில் உள்ள திவ்யதேசங்களிலேயே தமிழ்நாட்டுக் கோவில்கள் போல் கோபுரம் அமைந்த கோவில் திருவனந்தபுரம் அனந்தபத்மநாபர் கோவில்தான். அகலமாக, மேலே ஒரு படகு போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது.
திவாகர முனிவர் என்பவர் அனந்தன்காடு என்ற இடத்தில் ஒரு இலுப்பை மர வடிவில் இந்தப் பெருமாளைக் கண்டார். திருவல்லாறு தொடங்கி, திருவனந்தபுரம் ஈடாக திருப்பாப்பூர் வரை சுமார் ஐந்து மைல் நீளத்தில் இலுப்பைமர வடிவில் இருந்த பெருமாள். முனிவரின் வேண்டுகோளின்படி தன் உருவத்தைப் பதினெட்டு அடிகளாகச் சுருக்கிக் கொண்டார்.
திவாகர முனிவருக்கு நிகழ்ந்தது போல் வில்வமங்கள நம்பூதிரி என்பவருக்கும் நிகழ்ந்ததாகவும் ஒரு வரலாறு உண்டு. திவாகர முனிவர், வில்வமங்கள நம்பூதிரி இருவருமே பெருமாளுக்கருகே கர்ப்பக்கிரகத்த்தில் உள்ளனர். இவர்களைத்தவிர கௌண்டின்யர் என்ற முனிவரும் சந்நிதியில் இருக்கிறார்.
பிற்காலத்தில், இந்தக் கோவிலில் ஒரு தீ விபத்து ஏற்பட்டதால்,, மார்த்தாண்ட வர்மன் என்ற மன்னன் பெருமாள் இட்ட கட்டளைப்படி நேபாளத்திலிருந்து 2400 சாலிக்கிராமங்களை யானை மீது எற்றிக் கொண்டு வரச்செய்தான். அவற்றில் 1200 சாளக்கிராமங்களைக் கொண்டு இப்போது உள்ள 18 அடி நீள விக்கிரகம் உருவாக்கப்பட்டது. மீதமுள்ள 1200 சாளக்கிராமங்கள், பிற்காலத்தில் தேவைப்பட்டால் பயன்படுத்தப்படுவதற்காகக் கீழே புதைத்து வைக்கப்பட்டுள்ளன.
1686இல் தொடங்கி 40 வருடங்கள் கோவில் நிர்மாணப் பணிகள் நடந்து, 1726ஆம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டது. 1750ஆம் ஆண்டு, மார்த்தாண்டவர்மன் தன்னை பத்மநாபதாசன் என்று அறிவித்துக் கொண்டான்.அவனது வம்சத்தினரும் அவ்வாறே அழைக்கப்படுகின்றனர்.
மூலவர் - அனந்த பத்மநாபன். ஆதிசேஷன் மீது சயனித்த திருக்கோலம், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். நாபிக்கமலத்தில் பிரும்மா. பெருமாளின் திருமுடி, உடல், திருவடி ஆகியவற்றைத் தனித்தனியே தரிசிக்கும் வகையில் மூன்று வாசல்கள் உள்ளன,
தாயார் - ஸ்ரீஹரி லட்சுமி. தனிக்கோவில் இல்லை. உத்சவராகப் பெருமாளுடன் இணைந்து கர்ப்பக்கிரகத்தில் இருக்கிறார்.
விமானம் - ஹேமகூட விமானம்
தீர்த்தம் - மத்ஸ்ய தீர்த்தம், வராக தீர்த்தம்
நரசிம்மர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், கணபதி சந்நிதிகள் இருக்கின்றன.
பெருமாளைத் தரிசிக்க மேடைக்கு ஐந்தாறு படிகள் ஏறிச் செல்ல வேண்டும். கைப்பிடி இல்லாததாலும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒழுங்கு முறை சரியாகக் கடைப்பிடிக்கப்படாததாலும் , படிகளில் அனைவரும் கூட்டமாக ஏற, ஓரத்தில் ஏறுபவர்கள் நெருக்கத்தால் கீழே விழாமல் இருக்க, மிக கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. அத்துடன், சிலர் படிகளில் ஏறாமல், பக்கவாட்டில் போய் மேடையில் தாவி ஏறுகிறார்கள். கோவில் நிர்வாகம் இவற்றை கவனித்து, தரிசனம் செய்ப்பவர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினால் சிறப்பாக இருக்கும்.
மிகப்பெரிய கோயில். பிரகாரம் முழுவதும் தூண்கள் என்று கோவிலின் அமைப்பு அற்புதமாக இருக்கிறது.
இந்த திவ்யதேசம் பற்றி எங்கள் யாத்திரை வழிகாட்டி தஞ்சாவூர் ரமேஷ் அவர்களின் வீடியோவும், வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் வீடியோவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த திவ்யதேசம் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியிருக்கிறார்.
நகுலனால் புனர்நிர்மாணம் செய்யப்பட திவ்யதேசம் திருவண்வண்டூர். திருப்பாண்டவனூர் என்ற பெயர் காலப்போக்கில் திருவண்வண்டூர் என்று மாறியிருக்கலாம். திருவமுண்டூர் என்றும் இந்த ஊர் அழைக்கப்படுகிறது.
நாரதர் ஒருமுறை பிரம்மாவின் சாபத்துக்கு ஆளாகி இந்த ஊரில் வந்து தவம் செய்தார். அப்போது பெருமாள் அவருக்குக் காட்சி கொடுத்தார். நாரதீய புராணம் என்ற நூலை அவர் இங்கிருந்தபடிதான் எழுதினார் என்பது ஸ்தல புராணம்.
மார்க்கண்டேய மகரிஷிக்குப் பெருமாள் கமலவல்லித் தாயார் சமேதராக இங்கே காட்சி அளித்தார் என்பதும் இந்த திவ்யதேசத்தின் சிறப்பு.
பம்பா நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ளது இந்த திவ்யதேசம்
மூலவர் - கமலநாதன், பாம்பணையப்பன் (பம்பா நதிக்கு அருகில் எழுந்தருளியிருப்பதால் இந்தப் பெயர்) வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார் - கமலவல்லி நாச்சியார் (தனிக்கோவில் சந்நிதி இல்லை)
விமானம் - வேதலய விமானம்
தீர்த்தம் - பாபநாச தீர்த்தம், பம்பா தீர்த்தம்
நாங்கள் சென்றபோது பெருமாள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அற்புதமாகக் காட்சி அளித்தார்.
இந்த திவ்யதேசத்தின் பெருமையை தஞ்சாவூர் ரமேஷ் அவர்கள் விளக்கும் வீடியோ கீழே.
இந்த திவ்யதேசத்தை நம்மாழ்வார் 11 பாசுரங்களில் மங்களாசாஸனம் செய்திருக்கிறார்.
திருச்செங்குன்றூர் (திருச்செங்கண்ணூர்), திருவாறன்விளை, திருவல்லவாழ், திருப்புலியூர், திருவண்வண்டூர் ஆகிய ஐந்து திவ்யதேசங்களும் சற்று அருகருகிலேயே அமைந்துள்ளன. திருச்செங்குன்றூர் திவ்யதேசம் திருச்சிற்றாறு என்றும் அழைக்கப்படுகிறது. பம்பா நதியின் கிளையான திருச்சிற்றாறின் கரையில் அமைந்திருப்பதால் இந்தப் பெயர்.
மகாபாரதப் போரின்போது துரோணரின் மகன் அஸ்வத்தாமா கொல்லப்பட்டதாக அவரை நம்ப வைத்து அதன் மூலம் அவரை பலவீனப்படுத்தி வீழ்த்தியதில் யுதிஷ்டிரனுக்கும் பங்கு உண்டு. இந்தப் பாவத்தைப் போக்கிக்கொள்ள யுதிஷ்டிரன் இந்தக் கோவிலைப் புனர் நிர்மாணம் செய்தான்.
சிவபெருமானிடம் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி பஸ்மாசுரன் என்ற அரக்கன் அவரையே அழிக்க முன்றபோது மோகினியாக வந்து நடனமாடி அரக்கனை அழித்த வரலாறும் இந்த திவ்யதேசத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
மூலவர் - இமையவரப்பன். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். வழக்கத்துக்கு மாறாக, இங்கே சங்கு வலக்கையிலும், சக்கரம் இடக்கையிலும் இருக்கிறது.
தாயார் - செங்கமலவல்லி நாச்சியார் (தனிக்கோவில் நாச்சியார் இல்லை)
விமானம் - ஜகஜ்ஜோதி விமானம்
தீர்த்தம் - சங்க
தீர்த்தம்
இந்த திவ்யதேசம் பற்றித் தஞ்சை ரமேஷ் அவர்களின் விளக்கவுரையை இந்தக் காணொளியில் கேட்டு மகிழலாம்.
ஆறன்முளா என்று அழைக்கப்படும் திருவாறன்விளை செங்கண்ணூருக்கு அருகில் பம்பா நதியை ஒட்டி உள்ளது. ஆறன்முளா என்ற சொல் ஆறு கொம்புகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட படகைக் குறிக்கிறது.
மாங்காட்டு நம்பூதிரி என்பவர் இல்லத்தில் ஒவ்வொரு திருவோணத்தன்றும் அதிதியாக வந்து ஒரு பிரம்மச்சாரி உணவு அருந்தி விட்டு வந்தார்.
ஒருமுறை இந்த திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள், நம்பூதிரியின் கனவில் வந்து, பிரம்மச்சாரியாக வந்து உணவருந்தி விட்டுப் போவது தான்தான் என்று கூற, பெருமாளைக் காண நம்பூதிரி தன் ஊரிலிருந்து ஆறு கொம்புகளால் செய்யப்பட்ட ஒரு படகில் வந்தார். அதனால் இந்த ஊருக்கு ஆறன்முளா என்ற பெயர் ஏற்பட்டது.
இந்தக் கோவிலில் இருக்கும் பெருமாள் முதலில் நிலக்கண் என்ற ஊரில் உள்ள கோவிலில் இருந்ததாகவும் நிலக்கண் நாராயணன் என்று பெயர் பெற்ற அந்தப் பெருமாள் இந்த ஊறில் எழுந்தருள விரும்பி, ஒரு பக்தரின் கனவில் வந்து தன்னை இங்கே பிரதிஷ்டை செய்யும்படி கூறியதாகவும், அதன்படி நிலக்கண் நாராயணர் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் ஒரு ஐதீகம் உண்டு.
வியாசரும், பிரம்மாவும் மது, கைடபர்கள் என்ற அரக்கர்களை அழிக்கக் கோரி விஷ்ணுவைக் குறித்து இங்கே தவம் செய்தனர். அப்போது பெருமாள் பிரம்மா, வியாசர் இருவருக்கும் காட்சி கொடுத்தார்.
இந்தக் கோவில் அர்ஜுனனால் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மகாபாரதப் போரில் கர்ணனை யுத்த தர்மத்துக்கு விரோதமாக அவன் ஆயுதம் ஏந்தாதபோது கொன்றதற்குப் பிராயச்சித்தமாக, அர்ஜுனன் இந்தக் கோவிலைப் புனர்நிர்மாணம் செய்தான்.
(இதுபோல் யுதிஷ்டிரன் திருச்செங்கண்ணூரிலும், பீமன் திருப்புலியூரிலும், நகுலன் திருவண்வண்டூரிலும், சகதேவன் திருக்கடித்தானத்திலும் கோவிலைப் புனர்நிர்மாணம் செய்திருக்கிறார்கள். இது தவிர, இவர்கள் ஐவரும் திருவித்துவக்கோட்டில் நான்கு சந்நிதிகளை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.)
அர்ஜுனனால் நிறுவப்பட்டதால் இந்தப் பெருமாளுக்கு பார்த்தசாரதி என்று பெயர். வாமன மூர்த்தியைக் குறிக்கும் திருக்குறளப்பன் என்ற பெயரும் உண்டு. (நம்மாழ்வாரின் தாயாரின் ஊரான திருவண்பரிசாரத்திலும் பெருமாளின் பெயர் திருக்குறளப்பன் என்பதுதான்)
இங்கே ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் படகுப்போட்டி பிரசித்தி பெற்றது.
24.01.18 இரவு சுமார் 8 மணிக்கு நடை சாத்தும் முன்பு கோவிலுக்குப் போனேன். அப்போது ஸ்ரீவேலி முடிந்ததும் சந்நிதியைத் திறந்தபோது பார்த்தசாரதிப் பெருமாள் சந்தனக்காப்பில் மிக அழகாகத் தோற்றமளித்தார். மறுநாள் அதிகாலை நாலரை மணிக்கு கோவிலுக்குச் சென்றபோது விஸ்வரூப தரிசனமும் கிடைத்தது. பிறகு மீண்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்தார்கள்.
மூலவர் - பார்த்தாதிசாரதி, திருக்குறளப்பன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார் - பத்மாஸனித் தாயார் (தனிக் கோவில் சந்நிதி இல்லை)
விமானம் - வாமன விமானம்
தீர்த்தம் - பம்பா தீர்த்தம், வேதவியாஸ சரஸ்
பிரகாரத்தில், கீழ்த்தளத்தில் பலராமர் சந்நிதி அமைந்திருக்கிறது.படிகளில் றங்கி கீழே செல்ல வேண்டும். பிரகாரத்தை ஒட்டியே பம்பா நதிப் படிக்கட்டும் இருக்கிறது.
கோவிலின் சிறப்பை விளக்கும் வீடியோக்கள் கீழே.
இந்த திவ்யதேசம் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார். நம்மாழ்வாரின் பாசுரங்களை இந்த திவ்யதேசத்துப் பெருமாளே கேட்டு ரசித்ததாகச் சொல்லப்படுவது உண்டு.
இந்தக் கோவிலின் அமைப்பை இந்த வீடியோவில் கண்டு மகிழலாம்
கொல்லம்-எர்ணாகுளம் (திருவனந்தபுரம்-சென்னை) ரயில் மார்க்கத்தில் உள்ள திருவல்லா என்ற ஊர்தான் திருவல்லவாழ் எனும் இந்த திவ்யதேசம். இது ஸ்ரீவல்லப க்ஷேத்ரம் என்றும் அறியப்பட்டிருக்கிறது.
இந்தத் திருப்பதியில் உள்ள ஸ்ரீவல்லபரின் விக்கிரகம் தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டது. துவாபர யுகத்தில் கிருஷ்ண பரமாத்மாவால் கருடனுக்கு அளிக்கப்பட்ட இந்த விக்கிரகத்தை கலியுகத்தில் பிரதிஷ்டை செய்யலாம் என்று தீர்மானித்த கருடன், விக்கிரகத்தை அருகில் உள்ள நேத்ரவதி என்னும் நதியில் மறைத்து வைத்து விட்டார்.
கலியுகத்தில் சேரமான் பெருமாள் என்ற அரசனின் மனைவியின் கனவில் நேத்ரவதி நதியில் இந்த விக்கிரகம் இருக்கும் காட்சி தோன்ற, அந்த அரசி விக்கிரகத்தை எடுத்துக் பிரதிஷ்டை செய்தார் என்பது வரலாறு. கி.மு.59-இல் நிகழ்ந்தது இது.இதனால் இந்தக் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்தது.
கோவிலுக்குள் நுழைந்ததுமே ஐம்பது அடி உயர துவஜஸ்தம்பத்தின் உச்சியில் கருடன் வீற்றிருப்பதைக்காணலாம். இந்த கருடனை வணங்கி விட்டுக் கோவிலுக்குள் செல்வது மரபு. இந்த துவஜஸ்தம்பம் பூமிக்கு அடியிலும் ஐம்பது அடி புதைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
துர்வாசர் இந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்ததாகவும் ஒரு வரலாறு உண்டு. துர்வாசர் பெருமாளுக்கு 12,000 வாழைப்பழங்களை நிவேதனம் செய்தாராம். அதனால் ஆண்டுக்கு ஒருமுறை பன்னீராயிரம் திருவிழா என்ற உற்சவத்தில், பெருமாளுக்கு 12,000 வாழைப்பழங்கள் சமர்ப்பிக்கப்படும் வழக்கம் உள்ளது.
மங்களத்தம்மா என்ற மூதாட்டி ஏகாதசி விரதம் இருப்பதற்குத்த தோலாசுரன் என்ற அசுரன் இடையூறு செய்து வந்தான். ஒரு பிரம்மச்சாரியாக வந்த பெருமாள் தன் சுதர்சன சக்கரத்தால் தோலாசுரனை வாதம் செய்தார்.
பிறகு மூதாட்டியின் வீட்டுக்குச் சென்ற அவர், தோலாசுரன் தானே இறந்து விட்டதாக மூதாட்டியிடம் கூறினார். பிரம்மச்சாரி தன் மீது போர்த்தியிருந்த மான்தோல் சற்று விலகியபோது அவரது திருமார்பில் மகாலக்ஷ்மி இருந்ததைப் பார்த்து விட்ட மூதாட்டி பிரும்மச்சாரியாக வந்திருப்பவர் மகாவிஷ்ணுதான் என்று புரிந்து கொண்டார். பெருமாள் அந்த மூதாட்டிக்குத் தன் சுய உருவத்தைக் காட்டி அருளினார்.
மார்பில் திரு வாழ்வதை மூதாட்டிக்குக் காட்டிய ஊர் என்பதால் திருவல்லவாழ் என்ற பெயர் பெற்ற இந்த ஊர் திருவல்லா என்று இப்போது அழைக்கப்படுகிறது.
மூதாட்டி பிரம்மச்சாரிக்குத் தயிர்சாதமும் உப்புமாங்காயும் கொடுத்து உபசரித்ததால் இங்கே பெருமாளுக்குத் தயிர்சாதமும், உப்புமாங்காயும் அமுதாகப் படைக்கப்படுகிறது. அத்துடன் பெருமாளுக்கு நிவேதனம் செய்யுமுன் ஒரு அதிதிக்கு உணவு படைக்கும் வழக்கமும் இந்தக் கோவிலில் உள்ளது.
கண்டகர்ணன் என்ற பக்தனுக்குப் பெருமாள் மோட்சம் அளித்த தலம் இது.
மூலவர் - ஸ்ரீவல்லபன், திருவாழ்மார்பன், கோலப்பிரான். கிழக்கு
நோக்கிய திருமுக மண்டலத்துடன் நின்ற திருக்கோலம்.
தாயார் - செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் (பெருமாளின் திருமார்பில் உறையும் தாயாரின் பெயர் இது. தாயாருக்குத் தனிச் சந்நிதி இல்லை.)
விமானம் - சதுரங்க கோல விமானம்
தீர்த்தம் - கண்டகர்ண தீர்த்தம்
பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார், விஷ்வக்சேனர் சந்நிதிகள் இருக்கின்றன
எங்கள் யாத்திரையில் வழிகாட்டியாக வந்த தஞ்சாவூர் ரமேஷ் அவர்கல் இந்தக் கோவிலின் சிறப்புகள் குறித்து விளக்கும் காணொளிகளைக் கீழே காணலாம்.
.
இந்த திவ்யதேசத்தை திருமங்கை ஆழ்வார் 11 பாசுரங்களாலும் , நம்மாழ்வார் 11 பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர். நம்மாழ்வார் சரணாகதி செய்து கொண்ட ஐந்து திவ்ய க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
ஒன்பதாம் பத்து
ஏழாந் திருமொழி
1. தந்தைதாய் மக்களே சுற்றமென் றுற்றுவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ பழியெனக் கருதி னாயேல்
அந்தமா யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆய னாய
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே! (1808)
2673மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை (1)
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை (2)
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல் (3)
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத் (4)
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான் (5)
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும் (6)
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன் (7)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில் (8)
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள்
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும் (9)
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க (10)
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர் (11)
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண் (12)
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த (13)
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண் (14)
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் (15)
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார் (16)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம் (17)
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர் (18)
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு (19)
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே (20)
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின் (21)
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம் (22)
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் (23)
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல் (24)
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு
உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த் (25)
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள் (26)
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல் (27)
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் (28)
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள் (29)
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் (30)
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே? (31)
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் (32)
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை (33)
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை
பன்னாகராயன் மடப் பாவை பாவை தன் (34)
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன் (35)
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள் (36)
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய (37)
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் (38)
என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் (39)
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா (40)
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் (41)
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே?
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு (42)
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் (43)
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல்
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் (45)
இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய்
அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த (46)
இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்?
கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல் (47)
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன் (48)
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து (49)
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின் (50)
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் (51)
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த (52)
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் (53)
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண் (54)
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன் (55)
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய (56)
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும்
(57) தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர்
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன் (58)
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் (59)
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த (60)
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல் (61)
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல் (62)
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை வெள்ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப் (63) பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம் (64)
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் (65)
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் (66)
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை (67)
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் (68)
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் (69)
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் (70)
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் (71)
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் (72)
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும் (73)
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் (74)
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் (75)
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் (76)
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த்
தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் (77)
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும்
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா (78)
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் (79)
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் (80)
ஆல்வே க்கு அருகில் உள்ள திருப்பதி திருமூழிக்களம். எர்ணாகுளத்திலிருந்தும் வரலாம். திருக்காட்கரை, காலடி ஆகிய ஊர்களுக்குச் சமீபத்தில் உள்ளது.
இந்தத் திருப்பதி பற்றிய காணொளியைக் கீழே காணலாம்.
திருமொழிக்களம் என்ற பெயர் மருவி திருமூழிக்களம் ஆகியுள்ளது.
ஹாரிதர் என்ற முனிவருக்குப் பெருமாள் ஸ்ரீஸூக்திகள் என்னும் திருமொழிகளை அருளிய தலம் இது. (ஸ்ரீஸூக்தி, திருமொழி என்ற சொற்கள் பெருமாளின் சிறப்புகளை எடுத்துரைக்கும் நூல்கலைக் குறிக்கும்.)
ஹாரித மகரிஷி இங்கிருந்தபடி திருமந்திரம், யோகசாஸ்திரம் ஆகிய நூல்களை எழுதினார்.
இந்தக் கோவில் லக்ஷ்மணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ராமர் காட்டுக்குச் சென்றபோது அவரைத் தேடி, சேனைகளுடன் வந்த பரதனைத் தான் சந்தேகித்ததற்குப் பிராயச்சித்தம் தேடும் வகையில், லக்ஷ்மணர் இந்தத் திருத்தலத்துக்கு வந்து, இங்கிருக்கும் சங்கு தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை இங்கே பிரதிஷ்டை செய்தார். அதனால் இந்தக் கோவில் லக்ஷ்மணப் பெருமாள் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
மூலவர் - ஸ்ரீஸூக்திநாதன், மூழிக்களத்தான், திருமொழிநாதன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறார். நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.
தாயார் - மதுரவேணி நாச்சியார். மற்ற பல கோவில்களைப் போலவே, இந்தப் பெயர் மூலவரின் திருமார்பை அலங்கரிக்கும் தாயாரையே குறிக்கிறது. தாயாருக்குத் தனிக்கோவில் இல்லை.
விமானம் - சௌந்தர்ய விமானம்
தீர்த்தம் - சங்கு தீர்த்தம். (பரதன் விஷ்ணுவின் சங்கின் அம்சம். லக்ஷ்மணர் பரதனுக்குச் செய்த அபராதத்துக்குப் பரிகாரம் தேட இங்கு நீராடியதால் இது சங்கு தீர்த்தம் என்று பெயர் பெற்றது.
பிரகாரத்தில் பகவதி, கணபதி ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன.
எங்கள் குழுவுக்கு வழிகாட்டியாக வந்த தஞ்சாவூர் ரமேஷ் அவர்கள் இந்தக் கோவிலின் சிறப்புகள் பற்றி எடுத்துக்கூறியதன் காணொளியை இங்கே காணலாம்.
இந்தத் திருத்தலத்தை திருமங்கை ஆழ்வார் மூன்று பாசுரங்களில், நம்மாழ்வார் 11 பாசுரங்களிலும் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.
2673மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை (1)
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை (2)
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல் (3)
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத் (4)
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான் (5)
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும் (6)
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன் (7)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில் (8)
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள்
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும் (9)
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க (10)
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர் (11)
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண் (12)
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த (13)
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண் (14)
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் (15)
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார் (16)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம் (17)
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர் (18)
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு (19)
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே (20)
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின் (21)
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம் (22)
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் (23)
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல் (24)
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு
உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த் (25)
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள் (26)
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல் (27)
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் (28)
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள் (29)
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் (30)
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே? (31)
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் (32)
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை (33)
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை
பன்னாகராயன் மடப் பாவை பாவை தன் (34)
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன் (35)
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள் (36)
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய (37)
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் (38)
என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் (39)
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா (40)
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் (41)
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே?
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு (42)
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் (43)
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல்
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் (45)
இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய்
அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த (46)
இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்?
கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல் (47)
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன் (48)
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து (49)
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின் (50)
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் (51)
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த (52)
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் (53)
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண் (54)
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன் (55)
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய (56)
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும்
(57) தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர்
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன் (58)
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் (59)
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த (60)
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல் (61)
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல் (62)
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை வெள்ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப் (63)
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம் (64)
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் (65)
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் (66)
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை (67)
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் (68)
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் (69)
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் (70)
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் (71)
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் (72)
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும் (73)
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் (74)
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் (75)
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் (76)
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த்
தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் (77)
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும்
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா (78)
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் (79)
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் (80)