Wednesday, August 31, 2016

30. திவ்ய தேச தரிசன அனுபவம் 9 - திருஊரகம் (81)

தரிசனம் செய்த நாள் - 27/08/2016 (சனிக்கிழமை)
 தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
8. திருஊரகம் - 81


நேசத்தா லன்றுலகை நீர்வார்க்க வைத்தளந்த
வாசத்தா ளென்றலைமேல் வைத்திலையேல் - நாசத்தால்
பாரகத்து ளன்றிநான் பாழ்நரகில் வீழ்ந்தென்கொல்?
ஊரகத்து ணின்றாய்! உரை. (81)
 - பிள்ளைப் பெருமாள்  ஐயங்காரின்  'நூற்றியெட்டு  திருப்பதி அந்தாதி' 

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் திருஊரகம், திருநீரகம், திருக்காராகம், திருக்கார்வானம்  ஆகிய நன்கு திவ்ய தேசங்களை உள்ளடக்கியது.

இவற்றில் திருஊரகம் என்பது உலகளந்த பெருமாலைக் குறிக்கும்.

மகாபலிச் சக்ரவர்த்தியின் முன், வாமனனாக, சிறு உருவத்துடன் நின்ற பகவான்,  திரிவிக்கிரமனாக உருவெடுத்து, .ஓங்கி உலகளந்த உத்தமனாகி, இரு அடிகளால்  மண்ணுலகையும், விண்ணுலகையும் அளந்து, மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அழுத்தி, அவனுக்கு மோட்சத்தை அருளினார்.

திரிவிக்கிரமரின்  திருவடிக்குக்  கீழே, பாதாள உலகத்தில் இருந்தததால், பகவானின் இந்த விஸ்வரூபத்தை மகாபலியால் தரிசிக்க முடியவில்லை. மகாபலியின் வேண்டுகோளுக்கு இணங்க, பெருமாள் அவனுக்கு உலகளந்த பெருமாளாகக் காட்சி அளித்தார்.   இதுதான் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாளின் தலபுராணம்.

உலகளந்த பெருமாளின் விண்ணெட்டிய தோற்றத்தை மகாபலியால்
முழுவதுமாகக் காண முடியவில்லை. அதனால் அவன் காணும் விதமாக அவனுக்கு ஆதிசேஷன் வடிவில் காட்சி அளித்தார். ஆதிசேஷனாக பகவான் காட்சி அளித்த தோற்றம் 'திருஊரகம்' என்ற பெயரால் வழங்கப்படுகிறது. 'உரகம்' என்றால் பாம்பு. இதுவே மருவி 'ஊரகம்' என்றாகியது. ஊரகம்  என்ற இந்த வடிவம் நாம் வேறெங்கும் காண முடியாதது.

உலகளந்த பெருமாள் சுமார் 50 அடி உயரத்துடன் மிக பிரும்மாண்டமாகக் காட்சி அளிக்கிறார். மேற்கு நோக்கியபடி நின்ற திருக்கோலம். மஹாபலிக்கு அவர் காட்டிய வடிவம் விண்ணைத்தொட்ட வடிவம். அதைக்க கோயிலுக்குள் அடக்க முடியாது. இங்கே உள்ள வடிவம் நம்மைப்  போன்ற மனிதர்கள் காணும் விதமாக அமைந்துள்ளது. வலது காலைத்  தரையில் ஊன்றி, இடது காலை மேலே தூக்கி நிற்கிறார். 'இரண்டு அடிகளை அளந்து விட்டேன், மூன்றாவது அடியை எங்கே வைப்பது?' என்று கேட்கும் வண்ணமாக, இடது கரத்தில் இரண்டு விரல்களையும், வலது கரத்தில் ஒரு விரலையும் நீட்டியபடி நிற்கிறார். இந்த சந்நிதிக்குப் 'பேரகம்' என்றும் பெயர் உண்டு. உற்சவர் 'பேரகத்தான்' என்று அழைக்கப்படுகிறார்.

பெருமாள் சந்நிதிக்கு வெளியே, கர்ப்பக்கிரகத்துக்கு மிக அருகில், பெருமாளுக்கு வலப்புறமாக திருஊரகம் சந்நிதி இருக்கிறது.

விமானம் - ஸாரா  ஸ்ரீகர  விமானம்

தீர்த்தம் - நாக தீர்த்தம்

பிரகாரத்தில், பெருமாளுக்குப் பின்புறமாக ஆரணவல்லித் தாயாரின் சந்நிதி உள்ளது. இவர் அமுதவல்லி, அமிர்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறார். தயார் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்.

திருநீரகம், திருக்காராகம், திருக்கார்வானம் ஆகிய திவ்ய தேசங்கள் தனிச் சந்நிதிகளாகப் பிரகாரத்தில் உள்ளன.

திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் இந்தக் கோயிலில் அர்ச்சகராக இருந்திருக்கிறார்.

இந்த திவ்ய தேசம் திருமழிசை ஆழ்வார் (2 பாசுரங்கள்), திருமங்கை ஆழ்வார் (4 பாசுரங்கள்) ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6 பாசுரங்கள். பாசுரங்களைக் கீழே காணலாம்.

முதல் ஆயிரம் 
திருமழிசை ஆழ்வார் 
திருச்சந்த விருத்தம்
813 நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே
குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெஃகணைக் கிடந்தது என்ன நீர்மையே?            (63)
 
814 நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என் இலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே             (64)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திரு நெடுந்தாண்டகம்
2058 நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
      நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி 
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
      உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
      காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
      பெருமான் உன் திருவடியே பேணினேனே             (8)

2063 கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய் என்னும்
      காமரு பூங் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
      வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும்
      மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று
      துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே             (13)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமங்கை ஆழ்வார் 
சிறிய திருமடல்
2672 கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும்    (1)
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று    (2)
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும்    (3)
வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான்
கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை    (4)
வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி
ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழுந் தெருவே    (5)
ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து    (6)
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச்
சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு செங் குறிஞ்சித்    (7)
தார் ஆர் நறு மாலைச் சாத்தற்குத் தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும்    (8)
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு    (9)
கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும்   (10)
கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத்   (11)
தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ?
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர்   (12)
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின்
ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப்
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த   (13)
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு   (14)
ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்   (15)
நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு (16)
நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் (17)
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா
ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து (18)
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்
போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை (19)
சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி செங் குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் (20)
பேர் வாமன் ஆகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த் (21)
தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு (22)
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத்
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று (23)
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனைக் (24)
கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் (25)
ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் (26)
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்
வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன் (27)
சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் (28)
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு (29)
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள் (30)
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் (31)
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன் (32)
பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே
தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு (33)
ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை (34)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் (35)
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர் (36)
பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே (37)
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல் (38)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய மடல்
2673 மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை      (1)
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை      (2)
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல்      (3)
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத்      (4)
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான்      (5)
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும்      (6)
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன்      (7)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில்      (8)
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள்
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும்      (9)
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க   (10)
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர்     (11)
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண்     (12)
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த     (13)
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண்     (14)
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில்     (15)
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்     (16)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம்     (17)
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர்     (18)
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு     (19)
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே     (20)
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின்     (21)
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம்             (22)
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் (23)
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல் (24)
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு
உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த் (25)
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள் (26)
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல் (27)
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் (28)
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள் (29)
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் (30)
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே? (31)
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் (32)
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை (33)
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை
பன்னாகராயன் மடப் பாவை பாவை தன் (34)
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன் (35)
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள் (36)
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய (37)
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் (38)
என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் (39)
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா (40)
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் (41)
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே?
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு (42)
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் (43)
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல்
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் (45)
இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய்
அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த (46)
இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்?
கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல் (47)
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன் (48)
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து (49)
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின் (50)
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் (51)
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த (52)
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் (53)
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண் (54)
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன் (55)
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய (56)
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும்
(57) தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர்
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன் (58)
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் (59)
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த (60)
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல் (61)
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல் (62)
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை வௌ¢ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப் (63)
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம் (64)
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் (65)
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் (66)
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை (67)
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் (68)
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வௌ¢ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் (69)
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் (70)
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் (71)
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் (72)
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும் (73)
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் (74)
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் (75)
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் (76)
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த்
தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் (77)
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும்
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா (78)
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் (79)
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் (80) 

   ஓம் நமோ நாராயணாய!










Monday, August 29, 2016

29. திவ்ய தேச தரிசன அனுபவம் 8 - நிலாத் திங்கள் துண்டம்(80)

      தரிசனம் செய்த நாள் - 27/08/2016 (சனிக்கிழமை)                              
                                        தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
                                             7. திருநிலாத்திங்கட்டுண்டம்
மீண்டுந் தெளியார்கண் மேதினியோர் நின்னடிப்பூப்
பாண்டரங்க மாடி படர்சடைமேல் - தீண்டிக்
கலாத்திங்கட் டுண்டத்தின் மீதிருப்பக் கண்டு
நிலாத்திங்கட் டுண்டத் தானே! (80)
   - பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி' 

இந்த திவ்ய தேசம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குள் அமைந்திருக்கிறது. ஏகாம்பரநாதர்  சந்நிதிக்கு முன் உள்ள உட்பிரகாரத்தில் வலது புறம் ஒரு தனிச் சந்நிதியாக அமைந்துள்ளது இந்த திவ்ய தேசம்.

பார்வதி சிவபெருமானின் கோபத்துக்கு ஆளாகி காஞ்சிக்கு வந்து தவம் செய்தார். அவரைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான் பார்வதி தேவி தவம் செய்து கொண்டிருந்த இடத்திலிருந்த மரத்தைத் தீப்பிடித்து எரியச்  செய்தார்.

பார்வதி தனது சகோதரரான விஷ்ணுவை வாமன ரூபத்தில் தியானித்தார், (வாமனார்தானே விஸ்வரூபம் எடுக்கக் கூடியவர்?) அப்போது விஷ்ணு அங்கே தோன்றி நிலவின் கிரணங்களை நெருப்பின் மீது பாய்ச்சி அந்த இடத்தைக் குளிரச் செய்தார். அதனால் இவருக்கு நிலாத்திங்கள் துண்டத்தான் என்று பெயர். (நிலவின் கதிர்களைக்கொண்டு தீயைத் துண்டித்ததால் இந்தப் பெயர்.

அதற்குப் பிறகு சிவபெருமான் பார்வதியை மேலும் சோதனை செய்ய எண்ணி அங்கே கங்கையைப் பாயச் செய்தார். அப்போது பார்வதி சிவலிங்கத்தை அணைத்துக்கொள்ள, இருவரும் ஒன்றிணைந்தனர். சிவன் பார்வதி இருவருக்கும் அங்கே காட்சி அளித்தார் நிலாத்திங்கள் துண்டப் பெருமாள்.
இவருக்கு சந்திர சூடன் என்றும் பெயர் உண்டு.

இந்தச் சந்நிதி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் அமைந்திருப்பதால் இந்தப் பெருமாள் சிவாச்சாரியார்களாலேயே  பூஜை செய்யப்படுகிறார்.

27/08/16 மாலை நான் இந்த சந்நிதியில் தரிசனம் செய்தபோது அங்கிருந்த ஒரு வயதான சிவாச்சாரியார், '108 திருப்பதி பெருமாள்' என்று கூறியபடியே அனைவருக்கும் சடாரி வைத்து, துளஸிப் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார். தனிச் சந்நிதியில் சற்றே பெரிய உருவத்துடன் காட்சி அளிக்கிறார் பெருமாள்.

அதே சந்நிதியில் நிலாத் திங்கள் துண்டருக்கு அருகில் (வலது புறத்தில்) இன்னொரு விக்கிரகம் இருக்கிறது. 'அவர் யார்?' என்று கேட்டதற்கு 'ஆதி நாராயணன்' என்றார் சிவாச்சாரியார். ஆனால் இந்த விக்கிரகம் நிலாத்திங்கள் துண்டம் திவ்ய தேசத்தின் எந்தப் புகைப்படத்திலும் இடம் பெறவில்லை. இதைப்பற்றிய எந்தக் குறிப்பையும்  வலைத்தளங்களில் என்னால் காண முடியவில்லை.

நிலாத்திங்கள் துண்டப்  பெருமாள், தலைக்கு மேலே  ஆதிசேஷனுடன், மேற்கு நோக்கியபடி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். தாயாரின் பெயர் நிலாத்திங்கள் துண்டத் தாயார் மற்றும் நேர் ஒருவர் இல்லா வல்லி நாச்சியார். தயார் விக்கிரகம் சந்நிதியில் இல்லை. மற்ற திவ்ய தேசங்களுக்கு இருப்பதுபோல், இந்த திவ்ய தேசத்துக்கும் விமானம், தீர்த்தம் ஆகிய தனித்துவங்கள்  உள்ளன. விமானம் - புருஷ சுக்த விமானம். தீர்த்தம் - சந்திர தீர்த்தம்.

இந்த திவ்ய தேசம் பற்றித்  பற்றித் திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரம் பாடியிருக்கிறார். இந்த திவ்ய தேசம் ஏகாம்பரேஸ்வர் கோயிலுக்குள் இருப்பதாக அவர் எங்கும் குறிப்பிடவில்லை. வேறு எங்கோ இருந்த இந்தச் சந்நிதி எதோ ஒரு காரணத்தால் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் இடம் பெற்று விட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் இருப்பதால், பெருமாளின் உயர்ந்த நிலையை (பரத்துவத்தை) யாரும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என்பதற்காகத்தானோ என்னவோ, பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் தன்னுடைய  '108 திருப்பதி அந்தாதி'யில் (இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் இடம் பெற்றுள்ள பாசுரத்தில்), அர்ஜுனன், தான் கிருஷ்ணனின் காலடியில் சமர்ப்பித்த பூக்கள் சிவபெருமானின் தலையில் இருப்பதைக் கண்ட மகாபாரதக் கதையை நினைவு படுத்தி இருக்கிறார்!

இந்த திவ்ய தேசம் பற்றிய விவரமான கட்டுரையை இங்கே படிக்கலாம்.

பெருமாளின் திருவுருவை இங்கே காணலாம்.

ஆழ்வார் பாசுரம் இதோ:
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திரு நெடுந்தாண்டகம்
2058 நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
      நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
      உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
      காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
      பெருமான் உன் திருவடியே பேணினேனே             (8)

ஓம் நமோ நாராயணாய!

28. திவ்ய தேச தரிசன அனுபவம் 7 - திருநீரகம் (79)

தரிசனம் செய்த நாள் - 27/08/2016 (சனிக்கிழமை) 
 தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
6. திருநீரகம் (79)
ஆலத் திலைசேர்ந் தழியுலகை யுட்புகுந்த
காலத்தி லெல்வகைநீ காட்டினாய்? - ஞாலத்துள்
நீரகத்தாய்! நின்னடியே னெஞ்சகத்தாய்! நீண்மறையின்
வேரகத்தாய்! வேதியர்க்கு மீண்டு (79)
   - பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி'

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலுக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்தக் கோயிலுக்குள் நான்கு திவ்ய தேசங்கள் இருக்கின்றன! திருஊரகம், திருநீரகம், திருக்காரகம்,  திருக்கார்வானம் ஆகிய நான்கு.

"நீரின்றி அமையாது உலகு" என்பது வள்ளுவர் வாக்கு. நீரின் பெருமையை எடுத்துக்காட்டும் வண்ணம் அமைந்துள்ளது இந்த திவ்ய தேசம் என்று கொள்ளலாம்.

திருநீரகம் உலகளந்த பெருமாள் கோயிலின் பிரகாரத்தில் உள்ள ஒரு சந்நிதி. 16 கால் மண்டபத்துக்கு அருகே உள்ள இந்தச் சந்நிதியில் நீரகத்துப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இவர் நீரகத்தான், ஜெகதீஸ்வரர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். உற்சவர் இல்லை. (பல வலைப்பதிவுகளில் மூலவர் விக்கிரகம் இல்லை, உற்சவர் மூலவராகக் காட்சி அளிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பார்ப்பதற்கு, இந்த விக்கிரகம் மூலவர் விக்கிரகமாகவே தோற்றமளிக்கிறது!) தாயாரின் பெயர்  நிலமங்கைவல்லி நாச்சியார். தாயார் விக்கிரகம் தனியே இல்லை. பெருமாளின் திருமார்பில் எப்போதும் இடம் பெற்றிருக்கும் தாயாரைத்தான் இந்தப் பெயர் குறிக்கிறது என்று நினைக்கிறேன்.

பிரளய காலத்தில் கண்ணன் ஆலிலையில் மிதந்து வரும் காட்சியைக் காண விரும்பி, மார்க்கண்டேய மகரிஷி , பத்ரா  நதிக்கரையில் தவம் செய்தார். பகவான் மாயையினால் பிரளயக் காட்சியை உருவாக்கி ஆலிலைக் கண்ணனாக மார்க்கண்டேயருக்குக் காட்சி கொடுத்தார்.

ஒரு சிறிய ஓட்டை இருந்தாலும் நீர் அதில் புகுந்து விடும். அது போல் நம் மனதில்  சிறிதளவு பக்தி இருந்தாலும், பகவான் நமது மனதில் வந்து குடி புகுந்து விடுவார். பகவானின் நீர்மை குணத்தைக் காட்டும் திருக்கோலம்தான் திருநீரகம் என்றும் கொள்ளலாம்.

விமானம் - ஜெகதீஸ்வர விமானம்

தீர்த்தம் - அக்ரூர தீர்த்தம்

திருநீரகம் பற்றித் திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரம் பாடியிருக்கிறார். அந்தப் பாசுரம் இதோ:

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திரு நெடுந்தாண்டகம்
2058 நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
      நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
      உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
      காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
      பெருமான் உன் திருவடியே பேணினேனே             (8)

இந்த திவ்ய தேசத்தின் புகைப்படங்களை இங்கே காணலாம்.

இந்த திவ்ய தேசத்தை நான் தரிசித்த நாள்:  27/08/2016.

ஓம் நமோ நாராயணாய!

Sunday, August 28, 2016

27. திவ்ய தேச தரிசன அனுபவம் 6 - திருப்பாடகம்(78)

தரிசனம் செய்த நாள் - 27/08/2016 (சனிக்கிழமை)
தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
5. திருப்பாடகம் (78)
தவம்புரிந்த சேதனரைச் சந்திரனா தித்தன்
சிவன்பிரம னிந்திரனாச் செய்கை - உவந்து
திருப்பா டகமருவுஞ் செங்கண்மா றன்மார்
பிருப்பா டகவுரை யாலே (78)
          - பிள்ளைப்  பெருமாள் ஐயங்காரின் நூற்றியெட்டு திருப்பதி அந்தாதி 

திருப்பாடகம் என்ற திவ்ய தேசம் காஞ்சியில் உள்ள பாண்டவ தூதப் பெருமாள் கோயிலைக் குறிக்கிறது.

கண்ணன் பாண்டவர்களுக்காக துரியோதனனிடம் தூது சென்றார். அப்போது அவரது இருக்கைக்குக் கீழே குழி பறித்து மூடி, அவரை அதில் விழ வைத்து சபையில் அவரை அவமானப்படுத்த முயன்ற துரியோதனனின் சூழ்ச்சியை முறியடித்துத் தனது விஸ்வரூபத்தைக் காட்டினார் கிருஷ்ண பரமாத்மா.

இந்தக் கதையைக் கேட்ட ஜனமேஜயன் (அர்ஜுனனின் கொள்ளுப்பேரன், அபிமன்யுவின் பேரன், பரீக்ஷித்தின் மகன்) தானும் அந்த விஸ்வரூபத்தைக் காண ஆவல் கொண்டான். வைசம்பாயனரின் ஆலோசனையின்படி அவன் காஞ்சிக்கு வந்து அஸ்வமேத யாகம் செய்தான். யாக முடிவில் அவனுக்குத் தன் விஸ்வரூபத்தைக் காட்டி அருளினார் கிருஷ்ணர்.

ஒரு எளிய மனிதராகக் காட்சி அளித்த கிருஷ்ணன் திடீரென்று தன விஸ்வரூபத்தைக் காட்டி துரியோதனன் சபையிலிருந்த அனைவரையும் வியக்க வைத்தது போலவே, உள்ளே நுழையும்போது எளிமையாகக் காட்சி அளிக்கும் இந்தக் கோவிலும் ஒரு ஆச்சரியத்தை உள்ளடக்கி வைத்திருக்கிறது.

வரிசையாக நின்று கர்ப்பக்கிருகத்தில் நுழையும்போது முதலில் உற்சவர் மட்டும்தான் கண்ணுக்குப் புலப்படுகிறார். கர்ப்பக்கிருகத்துக்கு அருகில் சென்ற பிறகுதான் உற்சவருக்குப் பின்னே பிரும்மாண்டமாக வீற்றிருக்கும் மூலவர் இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாகப் புலப்படுகிறார்.

கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.  கிருஷ்ணன் மனித வடிவில் இருந்ததால், மூலவர் இரு கரங்களுடனேயே காட்சி அளிக்கிறார். வலது கரம் அபய ஹஸ்த முத்திரையையும் (பயப்படாதே, உன்னைக் காப்பாற்றுகிறேன் என்று கூறுவது போல), இடது கரம் வரத (வரம் அருளும் தோற்றம்) முத்திரையையும் தாங்கி நிற்கின்றன.

சுமார் 25 அடி உயரம் உள்ள பிரம்மாண்டமான உருவம். கர்ப்பக்கிருகத்தின் அகலம் முழுவதையும் அடைத்துக்கொண்டு மேற்கூரையை உடைத்துக்கொண்டு போகப்போவது போல் மேலே உயர்ந்து நிற்கும் தோற்றம் கண்கொள்ளாக் காட்சி. எத்தனை நேரம் நின்று பார்த்தாலும் முழு உருவத்தையும் பார்க்க முடியவில்லை. கற்பூர ஆரத்தியின் வெளிச்சம் மூலவரின் உருவத்தின் ஒரு சிறிய பகுதியில்தான் படுகிறது.

ஜனமேஜயருக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் நமக்கும் கிடைத்தாற்போல் ஒரு மன நிறைவு ஏற்படுகிறது.

உற்சவ மூர்த்தி, பாமா ருக்மிணித் தாயார் சமேதராக இருக்கிறார். தனிச் சந்நிதியில் இருக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் உற்சவ மூர்த்தி இங்கேயே இருக்கிறார்.

கர்ப்பக்கிருகத்துக்கு வெளியே ஆழ்வார்கள் ஆச்சார்யர்களின் உற்சவ மூர்த்திகள் இருக்கின்றனர். இவர்களில் ராமாநுஜரிடம் விவாதம் செய்து தோற்று அவர் சீடராக மாறிய அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும் இருக்கிறார்.

பிராகாரத்தில் இடது பக்கம் (பெருமாள் சந்நிதிக்குத் தெற்கே) ருக்மிணித் தாயாரின் சந்நிதி இருக்கிறது.. பிரகாரத்தின் வலது புறத்தில் (கர்ப்பக்கிருகத்துக்கு வடக்கே) சக்கரத்தாழ்வார் சந்நிதி இருக்கிறது. சந்நிதியின் முன்பக்கம் (மேற்கு நோக்கியபடி) யோகநரசிம்மரும், பின்பக்கம் (கிழக்கு நோக்கியபடி) சுதர்சனரும் இருக்கின்றனர். (வழக்கமாக` சக்கரத்தாழ்வாரின் உருவம்தான் முன்புறம் இருக்கும்).

பெருமாள் சந்நிதி, தாயார் சந்நிதி இரண்டுக்கும் பின்னே சுவர் எழுப்பப்பட்டு நந்தனம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பல்லவர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் சோழர்களால் விஜயநகர மன்னர்களாலும் திருப்பணிகள் நடைபெற்றிருப்பதைக்  கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

மூலவரின் புகைப்படத்தைக் கீழே காணலாம்.


இந்த திவ்ய தேசத்தை திருமழிசை ஆழ்வார் (2 பாசுரங்கள்), திருமங்கை ஆழ்வார் (2 பாசுரங்கள்), பேயாழ்வார் (1 பாசுரம்), பேயாழ்வார் (1 பாசுரம்) ஆகியோர் மங்களாசாஸனம் செய்திருக்கிறார்கள். மொத்தம் 6 பாசுரங்கள். மணவாள மாமுனிகளும் இந்த திவ்ய தேசத்தை மங்களாசாஸனம் செய்திருக்கிறார்.

 பாசுரங்கள் இதோ: 

நாலாயிர திவ்ய பிரபந்தம்
முதல் ஆயிரம் 
திருமழிசை ஆழ்வார் 
திருச்சந்த விருத்தம்
813 நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள் 
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே 
குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும் 
நின்று இருந்து வெஃகணைக் கிடந்தது என்ன நீர்மையே?            (63)
 
814 நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து 
அன்று வெஃகணைக் கிடந்தது என் இலாத முன்னெலாம் 
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் 
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே             (64)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருநறையூர்:7
 
1540 கல் ஆர் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சி பாடகத்துள் 
எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் இலங்கைக்கோன் 
வல் ஆள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு 
நல்லானுடைய நாமம் சொல்லில்-நமோ நாராயணமே             (4)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய மடல்
2673 மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை      (1)
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை      (2)
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல்      (3)
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத்      (4)
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான்      (5)
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும்      (6)
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன்      (7)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில்      (8)
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள் 
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும்      (9)
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க   (10)
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர்     (11)
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண்     (12)
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த     (13)
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண்     (14)
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில்     (15)
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்     (16)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம்     (17)
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர்     (18)
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு     (19)
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே     (20)
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின்     (21)
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம்             (22)
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் (23)
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல் (24)
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு
உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த் (25)
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள் (26)
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல் (27)
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் (28)
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள் (29)
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் (30)
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே? (31)
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் (32)
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை (33)
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை
பன்னாகராயன் மடப் பாவை பாவை தன் (34)
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன் (35)
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள் (36)
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய (37)
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் (38)
என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் (39)
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா (40)
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் (41)
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே?
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு (42)
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் (43)
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல்
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் (45)
இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய்
அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த (46)
இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்?
கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல் (47)
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன் (48)
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து (49)
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின் (50)
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் (51)
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த (52)
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் (53)
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண் (54)
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன் (55)
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய (56)
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும் 
(57) தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர்
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன் (58)
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் (59)
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த (60)
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல் (61)
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல் (62)
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை வெள்ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப் (63)
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம் (64)
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் (65)
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் (66)
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை (67)
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் (68)
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் (69)
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் (70)
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் (71)
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் (72)
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும் (73)
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் (74)
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் (75)
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் (76)
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த்
தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் (77)
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும்
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா (78)
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் (79)
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் (80)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
பூதத்தாழ்வார் 
இரண்டாம் திருவந்தாதி
2274 உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் பற்றிப்
பொருந்தாதான் மார்பு இடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு             (94)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
பேயாழ்வார் 
மூன்றாம் திருவந்தாதி
2310 சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம் 
நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண் துழாய்க் கண்ணி
இறைபாடி ஆய இவை             (30)

ஓம் நமோ நாராயணாய 


26. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி

ஸ்ரீ:
ஸ்ரீ ராமஜயம்
நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி
(அழகிய மணவாள தாசர் என்கிற பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றியது)
சிறப்புப் பாயிரம்
வெண்பா
ஏற்ற மணவாள ரிசைத்தாரந் தாதிவெண்பா
தோற்றக்கே டில்லாத தொன்மாலைப்- போற்றத்
திருப்பதியா நூற்றெட் டினையுஞ்சே விப்போர்
கருப்பதியா வண்ணமுண்டா க.

ஆழ்வார்கள் ப‌ன்னிருவர்
பொய்கைபூ தன்பேயார் பொன்மழிசைக் கோன்மாறன்
செய்ய மதுரகவி சேரர்பிரான் - வையகமெண்
பட்டர்பிரான் கோதைதொண்டர் பாதப் பொடிப‌ரணன்
கட்டவிழ்தார் வாட்கலியன் காப்பு. (1)

நம்மாழ்வார்
பிறவாத பேறு பெறுதற்கெஞ் ஞான்று
மறவா திறைஞ்சென் மனனே!-துறவாளன்
வண்குருகூர் வாவி வழுதிவள நாடுடைய 
தண்குருகூர் நம்பிதிருத் தாள். (2)

உடையவர்
முன்னே பிறந்திறந்து மூதுலகிற் பட்டவெல்லாம்
என்னே மறந்தனையோ வென்னெஞ்சே!- சொன்னேன்
இனியெதிரா சன்மங்க ளின்றுமுதற் பூதூர்
முனியெதிரா சன்பேர் மொழி. (3)

கூரத்தாழ்வான்
முக்கால மில்லா முகில்வண்ணன் வைகுந்தத்
தெக்காலஞ் செல்வா னிருக்கின்றேன்?-தக்காரெண்
கூரத்தாழ் வானடியைக் கூடுதற்கு நாயடியேன்
போரத்தாழ் வானசடம் போட்டு. (4)

பட்டர்
நான்கூட்டில் வந்தவன்றே நானறியா நன்மையெல்லாம்
தான்கூட்டி வைத்தநலந் தான்கண்டீர் - ஆங்கூட்டச்
சிட்டருக்கு வாய்த்த திருவரங்க னின்ன‌ருளால்
பட்டருக்காட் பட்ட பயன். (5)

திருப்பதிகளின் வகை
ஈரிருப தாஞ்சோழ மீரொன்ப தாம்பாண்டி
ஓர்பதின்மூன் றாமலைநா டோரிரண்டாம் - சீர்நடுநா
டாறோடீ ரெட்டுத்தொண்டை யவ்வட‌நா டாறிரண்டு
கூறுதிரு நாடொன்றாக் கொள். (6)
நூல்

சோழநாட்டுத் திருப்பதிகள்- 40
1.திருவரங்கம் பெரிய கோயில்
சீர்வந்த வுந்தித் திசைமுகனா லல்லாதென்
சோர்வந்த சொல்லிற் சுருங்குமோ?-ஆர்வம்
ஒருவரங்கக் கோயி லுகந்தவரை யாள்வான்
திருவரங்கக் கோயிற் சிறப்பு. (1)

2.திருவுறையூர்
சிறப்புடைய செல்வத் திருப்பதிகள் போல‌
மறப்புடைய நாயேன் மனத்துள் - உறப்போந்
தறந்தையா நின்ற வரங்கா! திருவாழ்
உறந்தையாய்! இங்குறைந்த தோது! (2) 

3. திருத்தஞ்சை
ஓதக்கே ணெஞ்சே! உனக்குமிது நன்றெனக்கும்
மேதக்க நன்மையினி வேறில்லை - போதப்
பெருந்தஞ்சை மாமணியைப் பேணி வடிவம்
பொருந்தஞ்சை மாமணியைப் போற்று. (3) 

4. திருவன்பில்
போற்றிசெய வோர்குடைக்கீழ்ப் பொன்னாடு மிந்நாடு
நாற்றிசையு மாண்டாலு நன்கில்லை - தோற்றமிலா
எந்தையன்பி லாதி யிணைத்தா மாரையடிக்கே
சிந்தையன்பி லாதார் சிலர். (4) 

5.திருக்கரம்பனூர்
சிலமா தவஞ்செய்துந் தீவேள்வி வேட்டும்
பலமா நதியிற் ப‌டிந்தும் - உலகில்
பரம்பநூல் கற்றும் பயனில்லை நெஞ்சே!
கரம்பனூ ருத்தமன்பேர் கல். (5) 

6. திருவெள்ளறை
கல்லிருந்தான் றந்தை கலத்தோ னக்கமலத்
தில்லிருந்தான் றந்தையரங் கேசனென்றே - தொல்லைமறை
உள்ளறையா நின்றமையா லுள்ளமே! கள்ளமின்றி
வெள்ளறையான் றாளே விரும்பு. (6)

7.திருப்புள்ளம்பூதங்குடி
விரும்பினவை யெய்தும் வினையனைத்துந் தீரும்
அரும்பரம வீடு மடைவீர்--பெரும்பொறிகொள்
கள்ளம்பூ தங்குடிகொள் காயமுடை யீர்!அடிகள்
புள்ளம்பூ தங்குடியிற் போம். (7) 

8. திருப்பேர்நகர்
போமானை யெய்து பொருமானைக் கொம்புபறித்
தாமானை மேய்த்துவந்த வம்மானைத்--தாமச்
செழுந்திருப்பே ரானைச் சிறுகாலைச் சிந்தித்
தெழுந்திருப்பேற் குண்டோ விடர். (8) 

9.திருவாதனூர்
இடரான வாக்கை யிருக்க முயலார்
மடவார் மயக்கின் மயங்கார்--கடவுளர்க்கு
நாதனூ ராதரியார் நானெனதென் னாரமலன்
ஆதனூ ரெந்தையடி யார். (9) 

10.திருவழுந்தூர்
அடியாராய் வாழ்மி னறிவிலாப் பேய்காள்!
செடியார் வினையனைத்துந் தீரு--முடிவில்
செழுந்தூரத் தன்னெனினுஞ் செங்கண்மா லெங்கள்
அழுந்தூரத் தன்னணிய னாம். (10) 

11. திருச்சிறுபுலியூர்
ஆமருவி மேய்த்த வரங்ரெதி ரார்நிற்பார்?
தாமருவி வாணனைத்தோள் சாய்த்தநாள்--சேமம்
உறுபுலியூர் வன்றோ லுடையா னுடைந்தான்
சிறுபுலியூ ரெந்தைமேற் சென்று. (11) 

12. திருச்சேறை
சென்றுசென்று செல்வஞ் செருக்குவார் வாயிறொறு
நின்றுநின்று தூங்குமட நெஞ்சமே! - இன்றமிழைக்
கூறைகுஞ் சோற்றுக்குங் கூறாதே பேறாகச் 
சேறைக்கு நாயகன்பேர் செப்பு! (12)

13.திருத்தலைச்சங்கநாண்மதியம்
செப்புங்கா லாதவனுந் திங்களும்வா னுந்தரையும்
அப்புங்கா லுங்கனலு மாய்நின்றான் - கைப்பால்
அலைச்சங்க மேந்து மணியரங்கத் தம்மான்
தலைச்சங்க நாண்மதியத் தான். (13)

14.திருக்குடந்தை
தானே படைத்துலகைத் தானே யளித்துநீ
தானே யழிக்குந் தளர்ச்சியோ - வானில்
திருமகுடந் தைக்கச் சிறுகுறளாய் நீண்ட‌
மெரும‌!குடந் தைக்கிடந்தாய்! பேசு. (14)

15. திருக்கண்டியூர்
பேசவரிற் றென்னரங்கன் பேரெல்லாம் பேசுவாய்;
கேசவனைக் காண்கவிழி; கேட்கசெவி; - ஈசனார்
உண்டியூர் தோறு முழன்றிவர மற்றவிர்த்தான்
கண்டியூர் கூப்புகவென் கை. (15)

16.திருவிண்ணகர்
கையு முரையுங் கருத்துமுனக் கேயடிமை
செய்யும் படிநீ திருத்தினாய் - ஐயா!
திருவிண் ணகராளா! சிந்தையிலு மெண்ணேன்
பெருவிண் ணகராளும் பேறு. (16)

17.திருக்கண்ணபுரம்
பேறு தரினும் பிறப்பிறப்பு நோய்மூப்பு
வேறு தரினும் விடேன்கண்டாய் - ஏறுநீர்
வண்ணபுரத் தாய்!என் மணம்புகுந்தாய்! வைகுந்தா!
கண்ணபுரத் தாய்!உன் கழல். (17) 

18.திருவாலி
கழன்றுபோம் வாயுவினைக் கட்டாமற் றீர்ந்தம்
உழன்றுபோ யாடம லுய்ந்தேன் - அழன்று
பொருவாலி காலன் பரகாலன் போற்றும்
திருவாலி மாயனையே சேர்ந்து. (18)

19.திருநாகை
சேர்ந்துனக்குக் குற்றவேல் செய்திலனென் சிந்தையினீ
ஆர்ந்ததற்கோர் கைம்மா றறிகிலேன் - பூந்துவரை
மன்னா!கை யாழி வலவா! வலம்புரியாய்!
தென்னாகை யாய்!அருளிச் செய் (19)

20.திருந‌றையூர்
செய்ய சடையோன் றிசைமுகத்தோன் வானவர்கோன்
ஐயமறுத் தின்ன மறியாரே - துய்ய‌
மருநறையூர் வண்டுழாய் மாயோன்செவ் வாயோன்
திருநறையூர் நின்றான் செயல். (20)

21.திருநந்திபுரவிண்ணகரம்
செயற்கரிய செய்வோமைச் செய்யாம னெஞ்சே!
மயக்குவா ரைவர் வலியால் - நயக்கலவி
சிந்திபுர விண்ணகர மென்பர்திருச் செங்கண்மால்
நந்திபுர விண்ணகர நாடு. (21)

22. திருவிந்தளூர்
நாடுதும்வா! நெஞ்சமே! நாராய ணன்பதிகள்
கூடுதும்வா! மெய்யடியார் கூட்டங்கள் - சூடுதும்வா!
வீதியிந்த ளத்தகிலின் வீசுபுகை வாசமெழும்
ஆதியிந்த ளூரா ன‌டி. (22)

23. திருச்சித்திரகூடம்
அடியா லுலகெல்லா மன்றளந்து கொண்ட‌
நெடியானைக் கூடுதியே னெஞ்சே!-கொடிதாய‌
குத்திரகூ டங்கி கொளுந்தாமுன் கோவிந்தன்
சித்திரகூ டங்கருதிச் செல். (23)

24.திருச்சீராமவிண்ணகரம்
செல்லுந் தொறுமுயிர்ப்பின் செல்லு மிருவினையை
வெல்லு முபாயம் விரும்புவீர்!-தொல்லரங்கர்
சீராம விண்ணகரஞ் சேர்மின்!பின் மீளாத‌
ஊராம விண்ணகர முண்டு. (24)

25.திருக்கூடலூர்
உண்டுகேட் டுறுமோந் துப்பார்க்கு மைவ‌ர்க்கே
தொண்டுபட லாமோ?உன் றொண்டனேன் - விண்டிலங்கும்
ஆடலூர் நேமிமுத லைம்படையாய்! அன்புடையாய்!
கூடலூ ராய்!இதனைக் கூறு! (25)

26.திருக்கண்ணங்குடி
கூறுபுகழ்த் தன்னடிகே கூட்டுவனோ? இன்னமென்னை
வேறுபடப் பல்பிறப்பில் வீழ்த்துவனோ?- தேறுகிலேன்
எண்ணங் குடியா யிருந்தானின் றான்கிடந்தான்
கண்ணங் குடியான் கருத்து. (26)

27. திருக்கண்ணமங்கை
கருத்தினால் வாக்கினா னான்மறையுங் காணா
ஒருத்தனைநீ நெஞ்சே! உணரில் - பெருத்தமுகில்
வண்ணமங்கை கண்கால் வன‌சந் திருவரங்கம்
கண்ணமங்கை யூரென்று காண். (27)

28. திருக்கவித்தலம்
காணியு மில்லமுங் கைப்பொருளு மீன்றோரும்
பேணிய வாழ்க்கையும் பேருறவும் - சேணில்
புவித்தலத்தி லின்பமும் பொங்கரவ மேறிக்
கவித்தலத்திற் கண்டுயில்வோன் கால். (28) 

29. திருவெள்ளியங்குடி
காலளவும் போதாக் கடன்ஞாலத் தோர்கற்ற‌
நூளலவே யன்றி நுவல்வாரார்? - கோலப்
பருவெள்ளி யங்குடியான் பாதகவூண் மாய்த்த‌
திருவெள்ளி யங்குடியான் சீர். (29)

30. திருமணிமாடக்கோயில்
சீரே தருங்கதியிற் சேருகைக்கு நானுன்னை
நேரே வணங்கினே னெஞ்சே!நீ - பாரில்
அணிமாடக் கோயி லரங்கனார் நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கு. (30)

31. திருவைகுந்த விண்ணகரம்
வணங்கேன் பிறதெய்வ மாலடி யாரல்லாக்
குணங்கேடர் தங்களுடன் கூடேன் - இணங்கிநின்று
வைகுந்த விண்ணகரம் வாழ்த்துவே னீதன்றோ
வைகுந்த விண்ணகர வாழ்வு. (31)

32. திருவரிமேயவிண்ணகரம்
வாழு மடியார் மடநெஞ்சே! நம்மளவோ?
தாழுஞ் சடையோன் சதுமுகத்தோன் - பாழிக்
கரிமேய விண்ணகரக் காவலோன் கண்டாய்
அரிமேய விண்ணகரத் தார்க்கு. (32)

33. திருத்தேவனார்தொகை
ஆர்க்கும் வலம்பரியா வண்டமு மெண்டிசையும்
கார்க்கடலும் வெற்புங் கலங்கினவால் - சீர்க்கும் 
திருத்தேவ னார்தொகைமால் செவ்வாய்வைத் தூதத்
தருத்தேவ னார்தொகையுஞ் சாய்ந்து (33)

34. திருவண்புருடோத்தமம்
சாய்ந்த திருவரங்கந் தண்வேங் கடங்குடந்தை
ஏய்ந்த திருமா லிருஞ்சோலை - பூந்துவரை
வண்புருடோத் தமமாம் வானவர்க்கும் வானவனாம்
ஒண்புருடோத் தமன்ற னூர் (34)

35. திருச்செம்பொன்செய்கோயில்
[தலைவி ஆற்றாமை மிகுதியால் மடலூரத் துணிதல்]
ஊர்வேண் மடலை யொழிவேன் மடநாணம்
சேர்வேன் கரிய திருமாலைப் - பாரறிய
அம்பொன்செய் கோயி லரங்கனணி நாங்கூர்ச்
செம்பொன்செய் கோயிலினிற் சென்று (35)

36. திருத்தெற்றியம்பலம்
சென்றது காலந் திரைநரைமூப் பானவினி
என்றுகொல்? சாவறியோ மென்னெஞ்சே! - கன்றால்
உருத்தெற்றி யம்பலத்தை யோர்விளவின் வீழ்த்தான்
திருத்தெற்றி யம்பலத்தைச் சேர்! (36)

37. திருமணிக்கூடம்
சேராது முன்செய்த தீவினைபின் செய்வதுவும்
வாரா தினிநீ மடநெஞ்சே!--நேராக்
குருமணிக்கூ டத்தானைக் கொம்புபறித் தானைத்
திருமணிக்கூ டத்தானைச் செப்பு. (37)

38. திருக்காவனம்பாடி
செப்பேன் மனிதருக்கென் செஞ்சொற் றமிழ்மாலை 
கைப்பேன் பிறதெய்வங் காண்பாரை--எப்போதும்
காவளம்பா டித்திருமால் தாற்றா மரைதொழுது
நாவளம்பா டித்திரிவே னான். (38) 

39. திருவெள்ளக்குளம்
நானடிமை செய்யவிடாய் நானானே னெம்பெருமான்
தானடிமை கொள்ளவிடாய் தானானான்--ஆனதற்பின்
வெள்ளக் குளத்தே விடாயிரு வருந்தணிந்தோம்
உள்ளக் குளத்தேனை யொத்து. (39)

40. திருப்பார்த்தன்பள்ளி
ஒத்தமர ரேத்து மொளிவிசும்பும் பாற்கடலும்
இத்தலத்திற் காண்பரிய வென்னெஞ்சே!- சித்துணர்ந்த‌
தீர்த்தன்பள் ளிக்கிருந்து செப்பவெளி நின்றானைப்
பார்த்தன்பள் ளிக்குட் பணி. (40) 

பாண்டியநாட்டுத் திருப்பதிகள்-18
1. திருமாலிருஞ்சோலை
பணிந்தேன் றிருமாலைப் பாமாலை தாளில்
அணிந்தே னருட்டஞ்ச மாகத்--துணிந்தேன்
திருமா லிருஞ்சோலை சேர்ந்தே னெனக்கு
வருமா லிருஞ்சோதி வான். (41) 

2. திருக்கோட்டியூர்
வான்பார்க்கும் பைங்கூழ்போல் வாளாவுன தருளே
யான்பார்க்க நீபார்த் திரங்கினாய்--தேன்பார்ப்பின்
ஓசைத் திருக்கோட்டி யூரானே! இன்னமுமென்
ஆசைத் திருக்கோட்டி யான். (42) 

3. திருமெய்யம்
[பிரிவாற்றாத தலைவி இரங்கிக் கூறுதல்]
ஆளா யுனக்கன்பா யாசையாய் நாணிலிலாய்
வாளா மனைவியென்று வாழ்வேனைக்--கேளாய்
திருமெய்ய மாயா! சிலைகால் வளைத்து
வருமெய்ய மாயா மதன். (43)

4. திருப்புல்லாணி
மதயானைக் கோள்விடுத்து மாமுதலை கொன்ற‌
கதையா லிதயங் கரையும்--முதலாய‌
புல்லாணி மாலே! புறத்தோர் புகழிருப்பு
வல்லாணி யென்செவிக்கு மாறு. (44) 

5. திருத்தண்காலூர்
[தலைவனை பிரிந்த தலைவி வாடைக்கு வருந்தி யிரங்கல்]
மாறுப‌ட‌ வாடையெனும் வ‌ன்கால்வ‌ந்தென் முலைமேல்
ஊறுப‌ட‌ வூர்ந்த‌ வுளைவெல்லா--மாறத்
திருத்த‌ண்கா லூரான் றிருத்த‌ண் டுழாயின்
ம‌ருத்த‌ண்கா லூராதோ வாய்ந்து. (45) 

6. திருமோகூர்
[அன்னத்தைத் தூது விடுத்த தலைவி அதனைக் குறித்து ஐயுறுதல்]
வாயான் மலர்கோதி வாவிதொறு மேயுமோ?
மேயாம லப்பால் விரையுமோ? - மாயன்
திருமோகூர் வாயின்று சேருமோ? நாளை
வருமோ? கூர் வாயன்னம் வாழ்ந்து (46)

7. திருக்கூடல்
வாழ்விப்பா னெண்ணமோ? வல்வினையி லின்னமென்னை
ஆழ்விப்பா னெண்ணமோ? அஃதறியேன் - தாழ்விழாப்
பாடலழ கார்புதுவைப் பட்டர்பிரான் கொண்டாடும்
கூடலழ கா!நின் குறிப்பு. (47)

8. ஸ்ரீவில்லிபுத்தூர்
குறித்தொருவர் கொண்டாடுங் கொள்கைத்தோ? கோதை
நிறத்தவூர் விண்டுசித்தர் நீடூர் - பிறப்பிலியூர்
தாழ்வில்லி புத்தூரென் றைவர்க்குத் தானிரந்தான்
வாழ்வில்லி புத்தூர் வளம். (48)

9. திருக்குருகூர்
வளந்தழைக்க வுண்டாலென்? வாசமணந் தாலென்?
தெளிந்தகலை கற்றாலென்? சீசீ - குளிர்ந்தபொழில்
தண்குருகூர் வாவிச் சடகோப னூரெங்கள்
வண்குருகூ ரென்னாத வாய். (49)

10. திருத்தொலைவில்லிமங்கலம்
வாயு மனைவியர்பூ மங்கையர்க ளெம்பிராற்
காயுதங்க ளாழிமுத லைம்படைகள் - தூய
தொலைவில்லி மங்கலமூர் தோள்புருவ மேனி
மலைவில்லி மங்கலந்த வான். (50)

11. ஸ்ரீவரமங்கை (வானமாமலை)
வானோர் முதலா மர‌மளவா வெப்பிறப்பும் 
ஆனேற் கவதியிட லாகாதோ? - தேனேயும்
பூவர மங்கை புவிமங்கை நாயகனே!
சீவர மங்கையர‌ சே! (51)

12. திருப்பேரை
அரைசாகி வையமுழு தாண்டலு மின்பக்
கரைசார மாட்டார்கள் கண்டீர் - முரைசாரும்
தென்றிருப்பே ரைப்பதியான் சீர்கெட்டு நாவிலவன்
தன்றிருப்பே ரைப்பதியா தார். (52)

13. ஸ்ரீவைகுந்தம் 
[தலைவியின் இளமை கண்ட செவிலி இரங்கல்]
தாருடுத்துத் தூசு தலைக்கணியும் பேதையிவள்
நேருடுத்த சிந்தை நிலையறியேன் - போருடுத்த 
பாவைகுந்தம் பண்டொசித்தான் பச்சைத் துழாய்நாடும்
சீவைகுந்தம் பாடுந் தெளிந்து. (53)

14. திருப்புளிங்குடி
[தலைவி தோழியர்க்கு அறத்தொடுநிற்றல்]
தெளியும் பசும்பொற் சிறைக்காற்று வீச
விளியுந் துயர்போய் விடுமே - எளியேற்
கருளப் புளிங்குடிவா ழச்சுதனைக் கொண்டு
கருளப் புளிங்குவந்தக் கால். (54)

15. திருவரகுணமங்கை
[பாங்கு வெறிவிலக்கிச் செவிலியர்க்கு அறத்தொடுநிற்றல்]
காலமு நோயுங் கருதாத வன்னைமீர்!
வேலன் வெறியை விலக்குமின்கள்! - மாலாம்
வரகுண மங்கையன்றாள் வண்டுழாய் மேலே
தரகுண மங்கை தனக்கு. (55)

16. திருக்குளந்தை
தனக்குடலம் வேறான தன்மை யுணரான்
மனக்கவலை தீர்ந்துய்ய மாட்டான் - நினைக்கில்
திருக்குளந்தை யாருரைத்த சீர்க்கீதை பாடும்
தருக்குளந்தை யாமலிருந் தால். (56)

17. திருக்குறுங்குடி
தாலத் திழிகுலத்துச் சண்டாள மானாலும்
மேலத் தவரதனின் மேன்மைத்தே - கோலக்
குறுங்குடிவாழ் மாயன் குரைகழற்கா ளாகப்
பெருங்குடியாய் வாழ்வார் பிறப்பு. (57)

18. திருக்கோளூர்
பிறப்பற்று மூப்புப் பிணியற்று நாளும்
இறப்பற்று வாழ விருப்பீர்! - புறப்பற்றுத்
தள்ளுக்கோள் ஊராவிற் றாமோ தர‌ன்பள்ளி
கொள்ளுங்கோ ளூர்மருவுங் கோள்! (58)

மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
1. திருவனந்தபுரம் 
கோளார் பொறியைந்துங் குன்றியுட லம்பழுத்து 
மாளாமு னெஞ்சே! வணங்குதியால் - கேளார்
சினந்தபுரஞ் சுட்டான் றிசைமுகத்தான் போற்றும்
அனந்தபுரஞ் சேர்ந்தா னடி. (59)

2. திருவண்பரிசாரம்
[ பிரிவாற்றாது வருந்துந் தலைவியின் நிலை கண்ட செவிலி இரங்கல்]
அடியுங் குளிர்ந்தா ளறிவுங் குலைந்தாள்
முடிகின்றாண் மூச்சடங்கு முன்னே - கடிதோடிப்
பெண்பரிசா ரங்குப் பிறப்பித்து மீளுவார்
வண்பரிசா ரங்கிடந்த மாற்கு. (60)

3. திருக்காட்கரை
மார்க்கமுந் தாந்தாம் வழிபடுந் தெய்வமும்
ஏற்க வுரைப்பார்சொ லெண்ணாதே - தோற்குரம்பை
நாட்கரையா முன்னமே நன்னெஞ்சே! நாரணனாம்
காட்கரையாற் காளாகாய்! காண். (61)

4. திருமூழிக்களம் 
காண்கின்ற வைம்பூதங் கட்கு மிருசுடர்க்கும்
சேண்கலந்த விந்திரற்குந் தேவர்க்கும் - மாண்கரிய
பாழிக் களத்தாற்கும் பங்கயத்து நான்முகற்கு
மூழிக் களத்தான் முதல். (62)

5. திருப்புலியூர் 
[ தலைவி தோழியர்க்கு அறத்தொடுநிற்றல்]
முதல்வண்ண மாமே முலைவண்ண முன்னே
விதிவண்ண நீங்கி விடுமே - சதுரத்
திருப்புலியூர் நின்றான் றிருத்தண் டுழாயின்
மருப்புலியூர் தென்றல் வரின் (63)

6. திருச்செங்குன்றூர்
வரவேண்டுங் கண்டாய் மதிகலங்கி விக்குள்
பொரவே யுயிர்மாயும் போழ்து - பரமேட்டி!
செங்குன்றூர் மாலே! சிறைப்பறவை மேற்கனகப்
பைங்குன் றூர் கார்போற் பறந்து. (64)

7. திருநாவாய்
பறந்து திரிதரினும் பாவியே னுள்ளம்
மறந்தும் பிறிதறிய மாட்டா - சிறந்த
திருநாவாய் வாழ்கின்ற தேவனையல் லாலென்
ஒருநாவாய் வாழ்த்தா துகந்து. (65)

8. திருவல்லவாழ்
உகந்தார்க்கெஞ் ஞான்று முளனா யுகவா
திகந்தார்ககெஞ் ஞான்று மிலனாய்த் - திகழ்ந்திட்
டருவல்ல வாழுருவ மல்லவென நின்றான்
திருவல்ல வாழுறையுந் தே. (66)

9. திருவண்வண்டூர்
தேவி முலகு முயிருந் திரிந்துநிற்கும்
யாவும் படைத்த விறைகண்டீர் - பூவில்
திருவண்வண் டூருறையுந் தேவாதி தேவன்
மருவண்வண் டூர்துளவ மால். (67)

10. திருவாட்டாறு
மாலைமுடி நீத்து மலர்ப்பொன் னடிநோவப்
பாலைவன நீபுகுந்தாய் பண்டென்று - சாலவநான்
கேட்டாற் றுயிலேன்காண் கேசவனே! பாம்பணைமேல்
வாட்டாற்றுக் கண்டுயில்கொள் வாய். (68)

11. திருவிற்றுவக்கோடு
வாய்த்த கருமமினி மற்றில்லை நெஞ்சமே!
தோய்த்த தயிர்வெண்ணெய் தொட்டுண்ட - கூத்தன்
திருவிற் றுவக்கோடு சேர்ந்தாற் பிற‌விக்
கருவிற் றுவக்கோடுங் காண். (69) 

12. திருக்கடித்தானம்
காண விரும்பமெண்கண் கையுந் தொழவிரும்பும்
பூண விரும்புமென்றன் புன்றலைதான் - வாணன்
திருக்கடித்தா னத்தான் றிகிரியான் றண்டான்
திருக்கடித்தா னத்தானைச் சென்று. (70)

13. திருவாறன்விளை
சென்று புனன்மூழ்கிச் செய்தவங்கள் செய்தாலும்
வென்றுபுல னைந்தடக்கி விட்டாலும் - இன்றமிழால்
மாறன் விளைத்த மறையோதார்க் கில்லையே
ஆறன் விளைத்திருமா லன்பு. (71)

நடுநாட்டுத் திருப்பதிகள் - 2
1. திருவயிந்திரபுரம்
அன்பணிந்த சிந்தையரா யாய்ந்த மலர்தூவி
முன்பணிந்து நீரெமக்கு மூர்த்தியரே - என்பா
எமையிந் திரபுரத்தார்க் கின்றொண்ட ரானார்
தமையிந் திரபுரத்தார் தாம். (72)

2. திருக்கோவலூர்
தாமரையா னாதியாய்த் தரவரங்க ளீறான
சேம வுயிருஞ் செகமனைத்தும் - பூமடந்தைக்
காங்கோவ லாயுதன்பின் னாக வவதரித்த
பூக்கோவ லரயன் பொருள். (73)

தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
1. திருக்கச்சி - அத்திகிரி
பொருளாசை மண்ணாசை பூங்குழலார் போகத்
திருளாசை சிந்தித் திராரே - அருளாளன்
கச்சித்  திருப்பதியா மத்தியூர்க் கண்ணன்றாள்
உச்சித் திருப்பதியா யென்று. (74)

2. திருவட்டபுயங்கம்
என்றுத் துயருழக்கு மேழைகாள்! நீங்களிளங்
கன்றுபோற் றுள்ளிக் களித்திரீர் - அன்றுநடம்
இட்ட புயங்கத் திருசரண மேசரணென்
தட்டபுயங் கததர்க்கா ளாய். (75)

3. திருத்தண்கா
[பிரிந்து ஆற்றாளாய தலைவி தலைமகன் பக்கல் தனக்கு உள்ள
அன்புறுதியைத் தோழிக்குக் கூறுதல்]
ஆட்பட்டே னைம்பொறியா லாசைப்பட் டேனறிவும்
கோட்பட்டு நாணங் குறைபட்டேன் - சேட்பட்ட
வண்காவை வண்டுவரை வைத்த விளக்கொளிக்குத்
தணகாவைச் சேர்ந்தான் றனக்கு. (76)

4. திருவேளுக்கை
தனக்குரிய னாயமைந்த தானவர்கோன் கெட்டான்
உனக்குரிய னாயமைந்த னுய்ந்தான் - நினைக்குங்கால்
வேளுக்கை யாளரியே! வேறுதவி யுண்டோ?உன்
தாளுக்கா ளாகாத வர்க்கு. (77)

5. திருப்பாடகம்
தவம்புரிந்த சேதனரைச் சந்திரனா தித்தன்
சிவன்பிரம னிந்திரனாச் செய்கை - உவந்து
திருப்பா டகமருவுஞ் செங்கண்மா றன்மார்
பிருப்பா டகவுரை யாலே. (78) 

6. திருநீரகம்
ஆலத் திலைசேர்ந் தழியுலகை யுட்புகுந்த
காலத்தி லெல்வகைநீ காட்டினாய்? - ஞாலத்துள்
நீரகத்தாய்! நின்னடியே னெஞ்சகத்தாய்! நீண்மறையின்
வேரகத்தாய்! வேதியர்க்கு மீண்டு (79)

7. திருநிலாத் திங்கட்டுண்டம்
மீண்டுந் தெளியார்கண் மேதினியோர் நின்னடிப்பூப்
பாண்டரங்க மாடி படர்சடைமேல் - தீண்டிக்
கலாத்திங்கட் டுண்டத்தின மீதிருப்பக் கண்டு
நிலாத்திங்கட் டுண்டத் தானே! (80)

8. திருவூரகம்
நேசத்தா லன்றுலகை நீர்வார்க்க வைத்தளந்த
வாசத்தா ளென்றலைமேல் வைத்திலையேல் - நாசத்தால்
பாரகத்து ளன்றிநான் பாழ்நரகில் வீழ்ந்தென்கொல்?
ஊரகத்து ணின்றாய்! உரை. (81)

9. திருவெஃகா
உரைகலந்த நூலெல்லா மோதி யுணர்ந்தாலும்
பிரைகலந்த பால்பேரற் பிறிதாம் - தரையில்
திருவெஃகா மாயனுக்கே சீருறவாந் தங்கள்
உருவெஃகா வுள்ளத்தி னோர்க்கு. (82) 

10. திருக்காரகம்
ஓராதார் கல்வி யுடையேங் குலமுடையேம்
ஆரா தனமுடையேம் யாமென்று - சீராயன்
பூங்கர ரகங்காணப் போதுவார் தாடலைமேல்
தாங்கா ரகங்காரத் தால். (83)

11. திருக்கார்வானம்
தாலேலோ வென்றாய்ச்சி தாலாட்டித் தன்முலைப்பா
லாலேயெவ் வாறுபசி யாற்றினள்?முன் - மாலே!பூங்
கார்வானத் துள்ளாய்! கடலோடும் வெற்போடும்
பார்வான முண்டாய்!நீ பண்டு. (84)

12. திருக்கள்வனூர்
பண்டேயுன் றொண்டாம் பழவுயிரை யென்னதென்று
கொண்டேனைக் கள்வனென்று கூறாதே - மண்டலத்தோர்
புள்வாய் பிறந்த புயலே! உனைக்கச்சிக்
கள்வாவென் றொதுவதென் கண்டு? (85)

13. திருப்பவளவண்ணம்
கண்டறிந்துங் கேட்டறிந்துந் தொட்டறிந்துங் காதலால்
உண்டறிந்து மோந்தறிந்து முய்யேனே - பண்டைத்
தவளவண்ணா! கார்வண்ணா! காமவண்ணா! கச்சிப்
பவளவண்ணா! நின்பொற் பதம். (86)

14. திருபரமேச்சுரவிண்ணகரம்
பதத்தமிழாற் றன்னையே பாடுவித்தென் னைத்தன்
பதத்தடியார்க் கேயாட் படுத்தான் - இதத்த
பரமேச் சுரவிண் ணகரான் பலவான்
வரவேச் சுரலணைந்த மால். (87)

15. திருப்புட்குழி
மால்வே ழமுமரவு மாயையும்வெற் புங்கடலு
மேல்வீழ் படையும் விடமும்போய்ப் - பாலன்
நெருப்புட் குழிகுளிர நின்றதுங்கேட் டோதார்
திருப்புட் குழியமலன் சீர். (88)

16. திருநின்றவூர்
[தலைவி தோழியர்க்கு அறத்தொடுநிற்றல்]
சீரறிந்து தோழிமீர்! சென்று கொணர்ந்தெனக்குப்
போர முலைமுகட்டிற் பூட்டுமினோ! - நேரவுணர்
பொன்றவூர் புட்கழுத்திற் பொன்னைமா ணிக்கத்தை
நின்றவூர் நித்திலத்தை நீர். (89)

17. திருவெவ்வுளூர்
நீர்மைகெட வைதாரு நின்னோ டெதிர்த்தாரும்
சீர்மைபெற நின்னடிக்கீழ்ச் சேர்க்கையினால் - நேர்மையிலா
வெவ்வுளத்த னேன்செய் மிகையைப் பொறுத்தருளி
எவ்வுளத்தனே! நீ யிரங்கு. (90)

18. திருநீர்மலை
இரங்கு முயிரனைத்து மின்னருளாற் காப்பான்
அரங்க னொருவனுமே யாதல் - கரங்களால்
போர்மலைவான் வந்த புகழவாணன் காட்டினான்
நீர்மலைவா ழெந்தையெதிர் நின்று. (91)

19. திருவிடவெந்தை
நின்று திரியும் பிறவியெல்லா நேர்வித்துக்
கொன்று திரியுங் கொடுவினையார் - இன்று
வெருவிடவெஞ் சைக்கே விழுமியதொண் டானேன்
திருவிடவெந் தைக்கே செறிந்து. (92)

20. திருக்கடன்மல்லை
செறிந்த பணைபறித்துத் திண்களிற்றைச் சாடி
முறிந்துவிழப் பாகனையு மோதி - எறிந்து
தருக்கடன்மல் லைக்குமைந்தான் றஞ்சமென்று நெஞ்சே!
திருக்கடன்மல் லைக்குட் டிரி! (93) 

21. திருவல்லிக்கேணி
திரிந்துழலுஞ் சிந்தைதனைச் செவ்வே நிறுத்திப்
புரிந்து *பகனமின்? புகன்றால் - மருந்தாம்
கருவல்லிக் கேணியா மாக்கதிக்குக் கண்ணன்
திருவல்லிக் கேணியான் சீர். (94)

22. திருக்கடிகை
சீரருளா னம்மைத் திருத்திநா முன்னறியாக
கூரறிவுந் தந்தடிமை கொண்டதற்கே - நேரே
ஒருகடிகை யம்மனமே! உள்ளுகிலாய் முத்தி
தருசடிகை மாயவனைத் தான். (95)

வடநாட்டுத் திருப்பதிகள் - 12
1. திருவேங்கடம் (திருப்பதி)
தானே சரணமுமாய்த் தானே பலமுமாய்த்
தானே குறைமுடிக்குந் தனமையான் - தேனேய்
திருவேங் கடந்தொழுதேந் தியவிபூ திக்குள்
மருவேங் கடந்தனெமிவ் வாழ்வு. (96)

2. திருச்சிங்கவேள்குன்றம் (அகோபிலம்)
வாழ்குமரன் மேற்கனக வஞ்சகன்மே லோர்முகத்தே
சூழ்கருணை யும்முனிவுந் தோன்றியவால் - கேழ்கிளரும்
அங்கவேள் குன்ற வழல்சரபத் தைப்பிளந்த
சிங்கவேள் குன்றத்தி னார்க்கு. (97) 

3. திருவயோத்தி
ஆர்க்குமிது நன்றுதீ தானாலு நெஞ்சே!நீ
பார்க்கும் பலகலையும் பன்னாதே - சீர்க்கும்
திருவையோத் திப்பயலைச் சீரியமெய்ஞ் ஞானத்
துருவையோத் திற்பொருளை யோர். (98)

4. திருநைமிசாரணியம்
ஓரறிவு மில்லாத வென்போல்வார்க் குய்யலாம்
பேரறிவுண் டேனும் பிறர்க்கரிது - பாரறிய
நைம்மிசா ரண்ணியத்து நாதரடி யாரோடும்
இம்மிசார் வுண்டாயி னால். (99)

5. திருச்சாளக்கிராமம்
உண்டா முறைமை யுணர்ந்தடிமைப் *பேர்புண்டேன்
பண்டாங் குடிகுலத்தாற் பன்மதத்தால் - கொண்டாட்டால்
ஆளக் கிராமத்தா லல்லற்பேர் பூணாமல்
சாளக் கிராமத்தார் தாட்கு. (100)

6. திருவதரியாச்சிரமம்
தாட்கடிமை யென்று தமையுணாரார்க் கெட்டெழுத்தும்
கேட்கவெளி யிட்டருளுங் கேசவனை - வேட்கையொடு
போவதரி தானாலும் போய்த்தொழுவோ நெஞ்சமே!
மாவதரி யாச்சிரமத் து. (101)

7. திருக்கங்கைக்கரைக்கண்டம்
மத்தாற் கடல்கடைந்து வானோர்க் கமுதளித்த
அத்தா! எனக்குன் னடிப்போதில் - புத்தமுதைக்
கங்கைக் கரைசேருங் கண்டத்தாய்! புண்டரிக
மங்கைக் கரைசே! வழங்கு. (102) 

8. திருப்பிருதி
வழங்கு முயிரனைத்தும் வாரிவாய்ப் பெய்து
விழுங்குங் கவந்தன் விறற்றோட் - கிழங்கைப்
பொருப்பிருதிக் குங்கிடந்தாற் போற்றுணிந்து வீழ்த்தான்
திருப்பிருதிக் கென்னெஞ்சே! செல். (103)

9. திருவடமதுரை
செல்வ முயுருடம்பு சேர வுரித்தாக்கி
வல்வினையி னீங்குமினோ மாந்தர்காள்! - தொல்லை
வடமதுரை யான்கழலே வாய்த்தஞ்ச மென்று
திடமதுரை செய்தான் றிறத்து. (104)

10. திருத்துவாரகை
திறந்திறமாத் தாந்துய்க்குந் தீஞ்சுவையை நாடி
அறந்திறம்பிப் பாதகரோ ரைவா - நறுந்துளவ
மாதுவரை யோனே! மனந்துணையாக் கொண்டென்னைக்
காதுவரை யோ!மெய் கலந்து. (105)

11. திருவாய்ப்பாடி (கோகுலம்)
கலந்தமர ரோடுங் கலைகண்டா ரோடும்
பொலிந்துதிரு நாட்டிருக்கப் போவீர்! - மலிந்தபுகழ்
அண்டராய்ப் பாடி யமலரடி யாரடியார்
தொண்டராய்ப் பாடித் தொழும். (106)

12. திருப்பாற்கடல்
தொழும்பாய நானல்ல சூதறிந்து கொண்டேன்
செழும்பா யலைமுத்தஞ் சிந்தி - முழங்கும்
திருப்பாற் கடலான்றாள் சேர்ந்தா ரடிசேர்ந்
திருப்பாற் கடலா மிடர். (107)

திருநாட்டுத் திருப்பதி - 1
திருவைகுந்தம் பரமபதம்
இடருடையேன் சொல்ல வெளிதோ பிரமன்
அடரும்விடை யோற்கு மரிதே - தொடரும்
கருவைகுந் தம்பிறவிக் கட்டறுத்து மீளாத் 
திருவைகுந் தம்பெறுவார் சீர். (108)


மண்ணி லரங்கமுதல் வைகுந்த நாடளவும்
எண்ணு திருப்பதிநூற் றெட்டினையும் - நண்ணுவார்
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்
பொற்பாத மென்றலைமேற் பூ.

பதின்ம ருரைத்த பதியொருநூற் றெட்டும்
துதிசெய்ய வந்தாதி சொன்னான் - அதிக
குணவாள பட்டரிரு கோகனகத் தாள்சேர்
மணவாள தாசன் வகுத்து.

நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி முற்றிற்று.

அழகிய மணவாளதாசர் திருவடிகளே சரணம்.